search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக அரசு"

    தமிழகத்தில் மே 23-ந் தேதிக்கு பிறகு அதிமுக அரசு முடிவுக்கு வந்துவிடும் என்று மார்க். கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தி.மு.க . வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று மாலை புதியம்புத்தூரில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தளமுத்துநகர், ஸ்பிக்நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது புதியம்புத்தூரில் பேசியதாவது:-

    பாராளுமன்றம் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 22 தொகுதி காலியாக உள்ளது. தேர்தல் ஆணையம் 18 தொகுதிக்கு மட்டும் தான் தேர்தல் நடத்தியது. மீதி ஓட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிக்கு தேர்தல் நடத்த மறுத்து விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி நிர்பந்தத்தின் காரணமாக தான் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலோடு அறிவிப்பு வெளியிடவில்லை. தேர்தலை நடத்தினால் வெற்றி பெற மாட்டோம் என எண்ணி தான் 4 தொகுதிகளிலும் தனியாக நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.

    தமிழ்நாட்டின் 2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் குற்றவாளி போல் கை கட்டிக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வையுங்கள், நடத்த முடியாது என அதிகாரிகள் கூறுகிறார்கள். இன்னும் மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளாட்சித் தேர்தல் நடத்தி இருந்தால் அந்த குடிநீர் பிரச்சினை மக்கள் பிரதிநிதி மூலம் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.

    நடந்து முடிந்த 39 பாராளுமன்ற தேர்தலிலும், 18 இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைய வாக்காளர்கள் எழுதி வைத்து விட்டார்கள். 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு முடிவு வந்துவிடும். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்க வேண்டுமா? முடிவு கட்டுங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு.

    ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தால் தான் நியாயம் கிடைக்கும். கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி மக்கள் ஆயத்த ஆடை தொழிலாளர்கள், தையல் தொழில் பயிற்சி, ஆயத்த ஆடை சந்தை கேட்டார்கள். ஆனால் கிடைக்கவில்லை. 30 ஆண்டுகாலம் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக ஓட்டப்பிடாரம் இருந்து வருகிறது. தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால் புதியம் புத்தூரில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாளை நடக்கும் அறப்போராட்டத்தில் தேர்தல் களம் காண்போம், வெற்றியை குவிப்போம் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #mkstalin #dmk

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மக்கள் கழகத்தைப் பார்க்கும் நிலையில், கழகத் தலைவர் என்ற முறையில் உடன்பிறப்புகளாகிய உங்களை நான் பார்க்கிறேன். களம் அழைக்கிறது; ஜனநாயக முறையிலான தேர்தல் களம். அதற்கு முன்பாக அமைதியாக நாம் பங்கேற்கிற அறப்போராட்டக் களம். ஆம் செப்டம்பர் 18! தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் அறப்போர்!

    ஊழலில் புற்றுநோயெனப் புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான, மாபெரும் அறப் போராட்டக்களம். கழக உடன் பிறப்புகளின் பெருந்திரள் பங்கேற்பினாலும் விண்ணதிரும் லட்சிய முழக்கங்களாலும், கோட்டையில் இருப்பவர்கள் குலை நடுங்கப் போகும் போராட்டம்! அந்த ஊழல் பேர்வழிகளை கையால் அரவணைத்து அடிமையாக்கி, மாநில உரிமைகளை காலால் நசுக்குகின்ற மத்திய மதவெறி பாசிச ஆட்சியாளர்களுக்கு, தீர்மானமான எச்சரிக்கை விடுக்கும் போராட்டம்!

    தலைவர் கலைஞர் அந்நாள்களில் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்த போது வாழ்ந்த ஊரான சேலத்தில், உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன். கழக முன்னோடிகள் பல்வேறு மாவட்டங்களிலும் தலைமை தாங்கி நடத்துகிறார்கள்.

    செப்டம்பர் 18, கழக வரலாற்றில் சிறப்புமிக்க நாள். தனது தலைவரான தந்தை பெரியாரிடமிருந்து விலகினாலும், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் பேரறிஞர் அண்ணா. ஒரே கொள்கையுடன், இரட்டைக் குழல் துப்பாக்கியாக இரு இயக்கங்களும் இனப்பகைக்கு எதிராக நின்ற வரலாறு திராவிட இயக்கத்திற்கு உண்டு.

    திராவிட முன்னேற்றக் கழகம் சென்னை மண்ணடி பவழக்காரத் தெருவில் உள்ள இல்லத்தில் 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் தொடங்கப்பட்ட நிலையில், அதற்கு மறுநாள் செப்டம்பர் 18-ம் நாள் அன்றுதான் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வ பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கொட்டும் மழையில் திரண்டிருந்த தோழர்களிடையே தி.மு.கழகத்தை அறிமுகப்படுத்தி அற்புத உரையாற்றினார் பேரறிஞர் அண்ணா.

    அந்த வரலாற்று நினைவுகளுடன், விழுப்புரத்தில் முப்பெரும் விழாவைச் சிறப்பாக நடத்தித் தந்தமைக்காக மாவட்டக் கழக நிர்வாகிகள் தொடங்கி ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் என் இதயத்தில் மலரெடுத்து நன்றி மாலை தொடுக்கிறேன். முப்பெரும் விழா சிறக்கக் கண்டோம். இனி முப்போதும் வெற்றி காண்போம்.

    அதனால், எப்போதும் நம் பணி ஓய்வதில்லை என்ற உணர்வுடன், கழகம் தோன்றிய நாளான செப்டம்பர் 17-ம் நாளில், நம் கண் போன்ற இயக்கத்தைக் கட்டிக் காப்போம் எனத் தலைவர் கலைஞரின் மீது உறுதியேற்று, செப்டம்பர் 18-ம் நாள் நடைபெறும் அறப்போர்க் களத்திற்கு ஆயத்தமாவோம்! வீணர்களின் ஆட்சியை வீழ்த்திட வீறுகொண்டு களம் புகுவோம்! வெற்றி இலக்கினை நோக்கி விரைந்து செல்வோம்! நாட்டைப் பிடித்திருக்கும் பிணி போக்கிட அணி அணியாய் நடைபோடுவோம்!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்று திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். #ttvdinakaran #tngovt

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பி.எஸ் யார்? அவர் 2001-ல் யாரால் சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சரானார்?. 2001 செப்டம்பரில் யாரால் முதல்வர் ஆனார் என்பது பெரியகுளம், தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றாக தெரியும். அவர் தம்பி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி கூடுதல் அட்வகேட் ஜெனரலாக உள்ளார். இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் கட்சியில் நீக்கம் செய்யப்பட்டவர்கள். இவர்களது சதியால் எங்களையும் ஜெயலலிதா ஒதுங்கி இருக்க சொன்னார். அப்போது நாங்கள் ஜெயலலிதாவிற்கு எதிராக எந்த வார்த்தையும் சொல்லவில்லை.

    ஓ.பி.எஸ். அவரது குடும்பத்தை கட்சியில் புகுத்தவே, ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்க மாட்டோம் என்று கூறுகிறார். அவர் யாருடைய ஏஜெண்டாக உள்ளார் என்பதும் மக்களுக்கும் தெரியும். அவர் சொல்வதை மக்கள் புறக்கணிப்பார்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவருமே துரோகத்தின் மொத்த உருவம்.


    இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். அதன் பின் ஓ.பி.எஸ் தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார். சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் உடல்நிலை நன்றாக உள்ளது.

    நான் கடந்த 18-ந் தேதி நேரில் சந்தித்தேன். நன்றாக இருந்தார். தேர்தல் வரும் போது கூட்டணி அமைப்போம். பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க. கூட்டணி வெற்றி பெறும். வரும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதி எங்கள் பக்கம் உள்ளது. எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ttvdinakaran #tngovt

    இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளதாக ஆற்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் வேதனையாக தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #ADMK
    ஆற்காடு:

    ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் நடந்தது. அப்போது ராமதாஸ் பேசியதாவது:-

    ஆட்சியாளர்களுக்கு பணம் கொடுப்பது மணல் தான். பால் போல் ஓடும் ஆற்றை எப்போது பார்ப்பது. நாம் ஆட்சிக்கு வந்தால் தான் பார்க்கலாம். ஒரு கிலோ மணல் கூட எடுக்க விட மாட்டோம்.

    பாலாற்றில் வெள்ளைக்காரன் காலத்தில் கட்டிய ஒரே ஒரு தடுப்பணை புதுப்பாடியில் தான் உள்ளது. பாலாற்றில் எப்போதும் தண்ணீர் செல்ல வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். தோல் கழிவுகளை பாலாற்றில் விட்டு பாழாக்கி விட்டனர். ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. பெண்கள் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். குடியை ஒழிக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது நடைபெறுவது ஊழல் ஆட்சி. அன்புமணி முதல் அமைச்சராக வந்தால் தான் ஊழல் இல்லாத ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்கள் வைத்துள்ளார். வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒரு கோடி பேருக்கு வேலை வழங்க உள்ளார்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மழைநீர் கூட கடலுக்கு செல்லாது. அதை அமல்படுத்த வேண்டும் என்றால் வாக்காளர் மனது வைக்க வேண்டும். நீங்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. பணம் வாங்க மாட்டோம் என வாக்காளர்கள் நினைக்க வேண்டும்.


    50 ஆண்டுகள் 2 திராவிட கட்சிகளும் தமிழ்நாட்டை நாசம் செய்து விட்டன. புரையோடி கிடக்கின்ற தமிழ்நாட்டை அன்புமணி தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தமிழ்நாட்டை மத்திய அரசு ஆட்டுவிக்கிறது. பினாமி அரசு ஆடுகிறது. சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை வழக்கு இன்று(நேற்று) விசாரணைக்கு வந்தது. அதனால் 7 ஆயிரம் குடும்பம் பாதுகாக்கப்பட்டது.

    இன்னும் கொஞ்சம் நாளில் தமிழ்நாடு திவாலாகும். ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதன் தலையிலும் ஒரு லட்சம் ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.170 கோடி வட்டி கட்டுகின்றனர். இந்த அரசு தேவையா?, மாற்றம் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss #ADMK
    அ.தி.மு.க அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருவதாக முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். #EVKSElangovan #ADMK
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் விழாவை காங்கிரசார் இன்று சிறப்பாக கொண்டாடினார்கள்.

    சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நவ இந்தியாவை உருவாக்கியவர் நேரு. அவர் வழியில் வந்த ராஜீவ் நவீன இந்தியாவை உருவாக்கினார். கம்ப்யூட்டர், தொலைத்தொடர்பில் புரட்சியை செய்தவர்.

    கிராமங்கள் முன்னேற பஞ்சாயத்துராஜ் திட்டத்தை கொண்டு வந்தார். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமப் பகுதிகளுக்கு மத்திய அரசின் நிதி நேரடியாக வந்தது.


    அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கிராமங்களுக்கு வரவேண்டிய 30 ஆயிரம் கோடி ரூபாய் நின்றுபோனது.

    தற்போதைய அ.தி.மு.க. அரசுக்கு மக்களைப்பற்றி எந்த கவலையும் இல்லை. தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறார்கள். எப்போது தேர்தல் நடத்தினாலும், எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் தென் சென்னை மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரங்க பாஷ்யம், வி.ஆர்.சிவராமன், பாலகிருஷ்ணன் மற்றும் நாஞ்சில் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #EVKSElangovan #ADMK
    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

    திருவாரூர்:

    திருவாரூரில் அமைச்சர் இரா.காமராஜ் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு துறை ஊழியர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சிலைகளை பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. சிலை கடத்தல் வழக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்கள், நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரித்தால் தான் சரியாக இருக்கும். அதன் அடிப்படையில் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.

    சம்பா சாகுபடி மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் அனைத்தும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். #statuesmugglingcase #ministerkamaraj #cbi

    அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ministerspvelumani #admk

    கோவை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடை பயிற்சி சாலையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பயிற்சி சாலை நவீன படுத்தப்பட உள்ளது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக திறந்த வெளி கலையரங்கம், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்படும். நடை பயிற்சி சாலையில் மழைநீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். திட்டத்தை வேகமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க. அரசு வருமான வரி சோதனைக்கு பயந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது தமிழகத்துக்கு செய்த துரோகம் என ஸ்டாலின் கூறி உள்ளாரே என கேட்டதற்கு வருமான வரித்துறை சோதனை வழக்கமான நிகழ்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்ட போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி உரிமையை மீட்டு எடுத்தனர்.

    எம்.பி.க்கள் இல்லாத தி.மு.க.வின் ஸ்டாலின் இது குறித்து பேசுவதற்கான அவசியம் என்ன என புரியவில்லை. மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க. தமிழர்களின் நலனுக்காகவோ, ஈழத்தமிழர்களின் நலனுக்காகவோ என்ன நடவடிக்கை எடுத்தது? என்றார்.

    ஆய்வின் போது கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி,எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #ministerspvelumani #admk

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாத நிலையில் உள்ளது என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #krishnasamy #tngovt

    மதுரை

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:-

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர புதிய தமிழகம் பல்வேறு போராட்டங்கள் வாயிலாக குரல் கொடுத்தது. இதற்கு மத்திய அரசு செவி சாய்த்து எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க உத்தரவிட்டது. மாநில அரசும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய முயற்சி எடுத்தது. இதற்காக மத்திய, மாநில அரசுகளை பாராட்டுகிறேன்.

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அனைத்து தலைவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரன், வீரன் சுந்தரலிங்கம் வரலாறுகளை இருட்டடிப்பு செய்யக் கூடாது.

    இதனை வலியுறுத்தி வருகிற 4-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது பல கிராமங்களில் சாதி ஏற்றத்தாழ்வு இருப்பதை பார்த்தேன். கவிஞர் பாரதிதாசன் கூறியது போல் சாதி ஒழித்தல், நல்ல தமிழ் வளர்த்தல் ஆகியவை மிகவும் அவசியம். இதில் ஒன்றை தவிர்த்தாலும் மற்றொன்று துலங்காது.

    தமிழகத்தில் தமிழ் உணர்வு எவ்வளவு அவசியமோ அதே போல சாதிய ஒழித்தல் அவசியம்.

    தமிழகத்தில் எடப்பாடி அரசு செயல்படாத நிலையில் உள்ளது. எனவே ஆளுநர் சுற்றுப்பயணம் மூலம் அரசு எந்திரங்களை செயல்பட வைக்கிறார். இதனால் மாநில சுயாட்சி கேள்விக்குறியாக உள்ளது. இதனை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #krishnasamy #tngovt

    தமிழக சட்டசபையில் எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். #admkgovernment #mkstalin

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி உரிமையை பெற்றதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெரும் பங்கு உள்ளது. சட்ட வல்லுனர்களை கொண்டு சரியான வாதத்தை முன்வைத்ததன் மூலமாக காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால் 80 அடி நீர் இருந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும் என்பது வழக்கம். இருப்பினும் குருவை சாகுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகவில்லை. அரசியலாகவே பார்க்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி பிரச்சினையை காரணம் காட்டி தான் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அ.தி.மு.க. அரசு பெரும்பான் மையை நிரூபிக்க எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது.


    கடந்த தி.மு.க. ஆட்சி தான் மைனாரிட்டி ஆட்சி. தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி மெஜாரிட்டியுடன் தான் செயல்படுகிறது. எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காம ராஜ் கூறினார். #admkgovernment #mkstalin

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் தீர்ப்பை பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-ந்தேதி முதல் 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடத்திய சட்டப் போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாகக் காத்து நிற்கின்றன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்ற பதவியிலும் இருந்து, ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக் கும் தீர்ப்பைப் பெற்றுள்ளது, அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    உடனடியாக காவிரி நீர்ப் பங்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலன்காக்க நடைபெற்று வரும் தமிழ்நாடு அரசு, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

    காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து, காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக் கும் தீர்ப்பைப் பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-5-2018 முதல் 27-5-2018 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    கூட்டம் நடைபெறும் தேதி, இடம், தலைமை தாங்குவோர் விவரம் வருமாறு:-

    24-5-2018 - கரூர் - அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர். 24-5-2018 - அரியலூர் - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் தாமரை எஸ்.ராஜேந்திரன், ஆர்.டி.ராமச்சந்திரன்.

    25-5-2018 - தஞ்சாவூர் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. 25-5-2018 - புதுக்கோட்டை - அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து. 26-5-2018 - நாகப்பட்டினம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஓ.எஸ்.மணியன். 26-5-2018 - திருச்சி - பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, ப.குமார் எம்.பி., டி.ரத்தினவேல் எம்.பி. 27-5-2018 - திருவாரூர் - துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.காமராஜ். 27-5-2018 - கடலூர் - அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஆ.அருண்மொழிதேவன் எம்.பி.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் அனைத்து நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சித் தொண்டர்களும், விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×